பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சின்னத்திரை நேயர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகம். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில நல்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தற்போது சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் சில தவறுகளை சுட்டிக்காட்டியும், நல்ல விஷயங்களை பாராட்டியும் பேசி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி வந்துவிட்டாலே ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் வசந்தனின் கருத்தைக் கேட்க அவரது சோஷியல் மீடியாவுக்கு படையெடுத்து விடுவார்கள். இந்நிலையில், அவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடுமையாகவிமர்சித்துள்ளார். சமீபத்தில் ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியில் ரிஹானா என்ற சிறுமி 'கருத்தவென்லாம் கலீஜா' என்ற பாடலை பாடினார். அதில் ஒரு பல்லவியில் தக்காளி என்ற வார்த்தை வரும். விவரம் அறியாத அந்த சிறுமியும் தக்காளி என்ற வார்த்தையை பாடகரை போலவே பாடுகிறார்.
இதுகுறித்து பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தன், அது ஒரு கெட்டவார்த்தையின் இணைச்சொல் என்பது எல்லா ஆண்களுக்கும் தெரியும். அந்த பிஞ்சு உதடுகள் அதை பாடும் போது எனக்கு திக்கென்று இருக்கிறது. கெட்ட வார்த்தைகளை பாடித்தான் பிழைப்பு நடத்த வேண்டுமா?' என கடுமையாக பேசியுள்ளார்.