அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
சின்னத்திரை இயக்குநர் திருமுருகனை கோபி என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு கோபி என்ற பெயருடன் சீரியல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 1998 முதலே பயணிக்க ஆரம்பித்த திருமுருகன் இதுவரை 14 சீரியல்களை இயக்கியுள்ளார். இதில் 'மெட்டில் ஒலி', 'நாதஸ்வரம்', 'குல தெய்வம்', 'கல்யாண வீடு' ஆகிய சீரியல்கள் சூப்பர் ஹிட்டானது. கடைசியாக கொரோனா சமயத்தில் உடல்நலக்குறைவால் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்ட அவர், எப்போது கம்பேக் கொடுப்பார் என அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், 'கோபி ரிட்டர்ன்ஸ்' என சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் திருமுருகன் தனது அடுத்த சீரியலுக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டார். இதற்கான ஆடிஷனும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலையும் திருமுருகன் தனது ஆஸ்தான டிவிக்கு தான் இயக்குகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் திருமுருகனின் புதிய சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.