சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

சின்னத்திரை இயக்குநர் திருமுருகனை கோபி என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு கோபி என்ற பெயருடன் சீரியல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 1998 முதலே பயணிக்க ஆரம்பித்த திருமுருகன் இதுவரை 14 சீரியல்களை இயக்கியுள்ளார். இதில் 'மெட்டில் ஒலி', 'நாதஸ்வரம்', 'குல தெய்வம்', 'கல்யாண வீடு' ஆகிய சீரியல்கள் சூப்பர் ஹிட்டானது. கடைசியாக கொரோனா சமயத்தில் உடல்நலக்குறைவால் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்ட அவர், எப்போது கம்பேக் கொடுப்பார் என அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், 'கோபி ரிட்டர்ன்ஸ்' என சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் திருமுருகன் தனது அடுத்த சீரியலுக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டார். இதற்கான ஆடிஷனும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலையும் திருமுருகன் தனது ஆஸ்தான டிவிக்கு தான் இயக்குகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் திருமுருகனின் புதிய சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.