எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஜய் டிவியில் 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வில் ரச்சிதா ஹீரோயினாக நடித்து வந்த போது, அவருக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவருக்கும் விஜய் டிவி சீரியல் குழுவிற்கு இடையே சலசலப்பு ஏற்படவே, சில தினங்களில் ரச்சிதா அந்த தொடரை விட்டு வெளியேறினார். அதன்பிறகு அவர் சில நாட்கள் கழித்து கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில், விதவை தாய் கதாபாத்திரத்தில் ரச்சிதா நடிக்க இருந்த தகவல் வெளியாகி கவனம் ஈர்த்தது. அப்போது பலரும் ரச்சிதாவிடம் அந்த சேனலில் நடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சமீபத்தில் லைவ் ஒன்றில் பேசிய ரச்சிதா, 'அந்த சேனலில் நடிக்காதீங்க! அந்த கதாபாத்திரத்தில் நடிச்சா பெயர் கெட்டுப்போகும்னு வாண்டட்டா வந்து பயமுறுத்தினாங்க. எங்க போனாலும் கெடுத்துவிடுறதுக்கு ஒரு கும்பல் இருக்கு' என தான் மிரட்டப்பட்ட கதையை தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'இது சொல்ல மறந்த கதை' தொடர் மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்து பாலிமர் சேனலில் தமிழில் டப்பாகி ஒளிபரப்பான 'நெஞ்சம் பேசுதே' தொடரின் ரீமேக் ஆகும். ரச்சிதா மற்றும் விஷ்ணு விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.