
செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத்
செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து கங்கனா கூறும்போது, “மருத்துவத் துறையில் செவிலியர்கள் மிக முக்கிய பங்காற்றினாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதில்லை. இப்போதும் கூட செவிலியர்கள் அணியும் சீருடையானது இன்னும் ஆங்கிலேயர் காலத்து தாக்கத்தை அதிகமாக கொண்டிருக்கிறது. குறிப்பாக சீருடையில் பயன்படுத்தப்படும் தொப்பி, பின், பெல்ட் போன்ற விஷயங்கள் அமெரிக்க கடற்படை பயன்படுத்திய சீருடை பாணியை ஒத்திருப்பது போல இருக்கிறது. இந்திய தட்பவெட்ப நிலைக்கு இந்த உடை பொருந்துவதில்லை. எனவே செவிலியர்களின் சீருடையை அவர்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப இந்தியமயமாக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!