ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

விஜய் டிவி ஹிட் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சமீபத்தில் தொடரின் டிஆர்பியை கூட்டும் வகையில் சமகால பிரச்னையை கையில் எடுத்து பேசுகிறோம் என்ற பெயரில், பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து படமாக்கி வருகின்றனர். இதற்காக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் அண்மையில் ப்ரணிகா நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலின் காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வது ப்ரோமோவில் காட்டப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், முகமது கோஷ் என்பவர் இது போன்ற காட்சிகளை சீரியலிலிருந்து நீக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், 'பொதுவாகவே தற்கொலை என்பது தவறான ஒன்று. அதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்வது மிக மிக தவறு. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதை நாம் பிள்ளைகளுக்கு வலியுறுத்தி சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதுபோன்று நடக்கும் பாலியல் கொடுமைகளை பற்றி தைரியமாக பெற்றோர்களிடமும் சொல்லவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கோம். இந்த சூழலில் பாலியல் தொல்லை காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதாக சீரியலில் காட்டியிருக்கிறார்கள். இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.




