என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
விஜய் டியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்த சமீரா, அதே சீரியலில் ஜோடியாக நடித்த சையத் அன்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்களுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சிலர் மோசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், 'குழந்தைக்கு பால் கொடுப்பதை கேமரா முன்னால் காட்ட வேண்டாம். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது' என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள சமீரா, 'அது எப்படி அருவருப்பா இருக்கும்? பால் கொடுப்பதை ஏன் சாதரண விஷயமா பாக்க மாட்றீங்க. சின்ன குழந்தைக்கு உணவளிப்பது அருவருப்பா? உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு' என்று கூறியுள்ளார். மேலும், இது போன்ற நெகடிவ்வாக கமெண்ட் அடிக்கும் பலரையும் தனது ஸ்டைலில் சமீரா வெளுத்து வாங்கி வருகிறார்.