தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
விஜய் டியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்த சமீரா, அதே சீரியலில் ஜோடியாக நடித்த சையத் அன்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்களுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சிலர் மோசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், 'குழந்தைக்கு பால் கொடுப்பதை கேமரா முன்னால் காட்ட வேண்டாம். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது' என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள சமீரா, 'அது எப்படி அருவருப்பா இருக்கும்? பால் கொடுப்பதை ஏன் சாதரண விஷயமா பாக்க மாட்றீங்க. சின்ன குழந்தைக்கு உணவளிப்பது அருவருப்பா? உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு' என்று கூறியுள்ளார். மேலும், இது போன்ற நெகடிவ்வாக கமெண்ட் அடிக்கும் பலரையும் தனது ஸ்டைலில் சமீரா வெளுத்து வாங்கி வருகிறார்.