நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி அருள்மொழி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் என்ற தொடரின் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சில தமிழ் தொலைக்காட்சி உலகில் அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக பிரபலமானார். தற்போது விஜய் டிவியின் முக்கிய தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-வில் முக்கிய வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். சின்னத்திரையில் ரசிகர்கள் பலரது மனங்களை கொள்ளை கொண்ட வைஷ்ணவிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை சீரியல்களில் தன் நடிப்பினால் அசத்தி வந்த அவர் சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள சபாபதி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த செய்தியை அண்மையில் பகிர்ந்த வைஷ்ணவிக்கு சகநடிகர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




