காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? |
சீரியலுக்காக பிரபல ஹீரோயின் செய்த மிகவும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் படங்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர். அதற்கேற்றார் போல் சீரியல் எடுப்பவர்களும் காட்சியின் பிரம்மாண்டத்திலும், ரிஸ்க்கான ஆக்சன் காட்சிகளையும் வைத்து வருகின்றனர். அதிலும் சமீப காலங்களில் சீரியல்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. எனவே ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவர்களது பங்கும் பெருகி வருகிறது.
அந்த வரிசையில் சீரியல் நடிகை தர்ஷினி கவுடா மிகவும் ரிஸ்க்கான சண்டை காட்சியில் நடித்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சில்லுன்னு ஒரு காதல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தர்ஷினி கவுடா. அந்த தொடரில் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்ட குழந்தையை காப்பாற்றும் காட்சிக்காக தர்ஷிணி கவுடா இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தலைகீழாக இறங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் தர்ஷினியின் தைரியத்தை நினைத்து பாராட்டி வருகிறார்கள்.