ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலிவுட் சினிமாவில் சில பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆர்யன்கானுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்து கடும் கோபமடைந்துள்ள கங்கனா ரணாவத் அவரை கடுமையாக சாடியுள்ளார். அதில், ‛தவறுகளை செய்பவர்களை நாம் மகிமைப்படுத்தக்கூடாது. இது அவர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். அவர்களின் செயல்களின் பாதிப்பை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அது அவரை சிறந்த மனிதராக மாற்றும். மேலும் யாராவது பாதிக்கப்படும்போது அவர்களைப் பற்றி கிசுகிசுக்காமல் இருப்பது நல்லது. ஆனால் குற்றம் செய்தவர்களை தவறு செய்யவில்லை என்று உணர வைப்பது குற்றச்செயலாகும்,' என்று ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட ஹிருத்திக் ரோஷனுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார் கங்கனா ரணாவத்.