'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கர். பொன்ராம் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ‛‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம் என்பது என் கருத்து. அது ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதேசமயம் ‛ரெமோ' படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் ஒரு படம் இயக்கலாம்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை எடுத்தே தீருவோம் என இயக்குனர் பொன்ராம் கங்கணம் கட்டி நிற்கிறார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ‛சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார். வளர்ந்து வரும் இளம் நாயகனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ம் பாகத்தை எடுத்தே தீருவோம். போட்றா வெடிய' எனக்கூறியுள்ளார்.