சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி நடித்துள்ள படம் ‛உடன்பிறப்பே'. ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி உள்ள இப்படம் அண்ணன் - தங்கை இடையேயான பாச படமாக, குடும்பங்கள் ரசிக்கும் படமாக தயாராகி உள்ளது. அண்ணனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும், இவரின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். அக்.,14ல் ஓடிடியில் இப்படம் வெளியாகிறது.
ஜோதிகா அளித்த பேட்டி : ‛என் சினிமா பயணம் அழகானது. இந்த நேரத்தில் இரண்டு பேருக்கு நன்றி சொல்லணும். ஒருவர் பிரியதர்ஷன் மற்றொருவர் வசந்த். எதுவும் புரியாத வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். என் கையை பிடித்துக் கொண்டு சூர்யா அழைத்து போனார். வாழ்கையிலும், சினிமாவிலும் இங்கே நிறைய கற்றுக்கொண்டேன்.
புதிய இயக்குனர்களிடம் நிறைய கதைகள் கேட்டேன். முடிந்தவரை என் படைப்புகளை சிறப்பானதாக கொடுத்து வருகிறேன். பெண்கள் வலிமையானவர்கள், அமைதியானவர்கள், சக்தி படைத்தவர்கள் என இப்படி தான் 90 சதவீத பெண்கள் வாழ்க்கை வாழ்கிறார்கள். பேசுவதை விட மவுனத்தில் தான் சக்தி இருப்பதாக நான் நம்புறேன்..
இந்த படம் எனக்கு புதிதாக இருந்தது. 50வது படமாக உடன்பிறப்பே அமைந்ததில் சந்தோஷம். சசிகுமார் இந்த படத்தில் மட்டுமல்ல நிஜமாகவே சகோதரன் போல் எனக்கு தெரிந்தார். சமுத்திரகனி கூட வேலை பார்த்தது ஒரு சைக்காலஜி மேட்சிங் மாதிரி இருந்தது. சூரி கூட தான் செட்டில் அதிகமாக பேசினேன். எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்துள்ளார். இந்த படத்தை மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.