பிளாஷ்பேக்: ஒரே இரவில் கதை எழுதி உருவாக்கப்பட்ட “ஓர் இரவு” திரைப்படம் | 'வணங்கான்' படத்தில் 'மிஸ்' ஆன வாய்ப்பு, இப்போது சூர்யா 46ல்… | விஷால், சாய் தன்ஷிகா வயது வித்தியாசத்தை ஆராயும் ரசிகர்கள்!! | ராஜமவுலி பாராட்டும், 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனரின் மகிழ்ச்சியும் | என்னாச்சு கேர்ள் பிரண்டுக்கு? : ரசிகர்களை அமைதிப்படுத்திய ராஷ்மிகா | கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் சேலை கட்டி அசத்திய கன்னட நடிகை | ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர் பட ரீ ரிலீஸில் அதிர்ச்சி : பாதியில் வெளியேறிய ரசிகர்கள் | மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி : விஜய் சேதுபதி | தொடரும் பட இயக்குனரை வீட்டுக்கே வரவழைத்து பாராட்டிய சூர்யா, கார்த்தி | 'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா |
விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் 10ம் தேதி வெளியான படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், படம் தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கிலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தமிழ், தெலுங்கு ஓடிடி வெளியீட்டை படம் வெளியான நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர். அதன்படி அக்டோபர் 10ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு தவிர, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அதே சமயம் ஹிந்தியில் படம் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு செப்டம்பர் 25ம் தேதியே ஓடிடியில் வெளிவந்துவிட்டது. தியேட்டர்களில் பார்த்ததை விட ஓடிடி தளத்தில் இப்படத்தை அதிகம் பேர் பார்த்ததாகச் சொல்கிறார்கள். அது போலவே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்கும் ஓடிடி தளத்தில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.