'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'பாகுபலி' படத்தின் மூலம் பான்-இந்தியா நடிகராக உயர்ந்துள்ளவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது 'சலார், ஆதிபுருஷ்' என்ற இரண்டு பிரம்மாண்டமான பான்-இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.
அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள 25வது படத்தின் அறிவிப்பு அக்டோபர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த சில வருடங்களாகவே அவர் கதை எழுதி வருகிறாராம். அடுத்தடுத்து சில படங்களை பிரபாஸ் நடிக்க ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தை ஆரம்பிப்பது தள்ளிப் போனது என்கிறார்கள்.
'அர்ஜுன் ரெட்டி' படத்தை ஹிந்தியில் 'கபீர் சிங்' என் ரீமேக் செய்து அங்கும் பெரிய வெற்றி பெற்றவர் சந்தீப். தற்போது 'அனிமல்' என்ற ரன்பீர் கபூர் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸின் 25வது படத்தில் சந்தீப் இணைந்தால் அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.