தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பாகுபலி' படத்தின் மூலம் பான்-இந்தியா நடிகராக உயர்ந்துள்ளவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது 'சலார், ஆதிபுருஷ்' என்ற இரண்டு பிரம்மாண்டமான பான்-இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.
அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள 25வது படத்தின் அறிவிப்பு அக்டோபர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த சில வருடங்களாகவே அவர் கதை எழுதி வருகிறாராம். அடுத்தடுத்து சில படங்களை பிரபாஸ் நடிக்க ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தை ஆரம்பிப்பது தள்ளிப் போனது என்கிறார்கள்.
'அர்ஜுன் ரெட்டி' படத்தை ஹிந்தியில் 'கபீர் சிங்' என் ரீமேக் செய்து அங்கும் பெரிய வெற்றி பெற்றவர் சந்தீப். தற்போது 'அனிமல்' என்ற ரன்பீர் கபூர் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸின் 25வது படத்தில் சந்தீப் இணைந்தால் அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.