'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
கண்ணான கண்ணே தொடரில் அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதையாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டிஆர்பியிலும் ரோஜா தொடருக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் நாயகி மீரா கதாபாத்திரத்தில் நிமிஷிகாவும் தந்தையாக நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் பப்லுவும் நடித்து வருகின்றனர்.
சீரியலில் சீரியஸாக இருக்கும் பப்லு ஆஃப் ஸ்கிரீனில் ஸ்போர்டிவாக பல சேட்டைகளை செய்து செட்டை கலகலப்பாக வைத்திருப்பாராம். அந்த வகையில் நிமிஷா, பப்லு உள்ளிட்டோர் கண்ணான கண்ணே சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருக்க, பப்லு தரையில் ஊர்ந்து சென்று நிமிஷிகாவின் காலை சீண்டுகிறார், இதனால் பயத்தில் நிமிஷிகா துள்ளிக்குதித்து அலறுகிறார். இந்த வீடியோவை பப்லு தனது இண்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய அது தற்போது வைரலாக பரவி வருகிறது.