நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாளி (மலையாளம்) நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இப்போது தன் பெயரை அருணாச்சலம் வைத்தியநாதன் என்று மாற்றிக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இது கணவன் மனைவிக்கு இடையிலான உளவியல் ரீதியான பிரச்சினையை பேசுகிற படம்.
இதில் கணவராக வெங்கட்பிரபுவும். மனைவியாக சினேகாவும் நடிக்கிறார்கள். தனுஷின் பட்டாஸ் படத்திற்கு பிறகு சினேகா நடிக்கும் படம். வெங்கட் பிரபு கடைசியாக கசடதபற படத்தில் நடித்திருந்தார்.
சினேகா நடிப்பது பற்றி அருணாச்சலம் வைத்தியநாதன் கூறியதாவது: ஆரம்பத்தில், நான் சினேகாவிடம் பேசியபோது, அவர் தயங்கினார், அவர் இதற்கு முன்பு அத்தகைய கேரக்டரை செய்யவில்லை என்று சொன்னார். ஆனால் நான் அவரிடம் கதையை விவரித்தவுடன், அவர் சிரித்துக் கொண்டே, நான் இதைச் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்கு பிறகு பிரசன்னா மற்றும் சினேகாவிடம் நல்ல நட்பில் இருக்கிறேன். அதானல் தான், நான் சினேகாவுடன் மீண்டும் பணியாற்ற முடிந்தது. இந்த படத்தில் சினேகா ஒரு வித்தியாசமான அம்மாவாக நடிக்கிறார். என்றார்.