‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாளி (மலையாளம்) நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இப்போது தன் பெயரை அருணாச்சலம் வைத்தியநாதன் என்று மாற்றிக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இது கணவன் மனைவிக்கு இடையிலான உளவியல் ரீதியான பிரச்சினையை பேசுகிற படம்.
இதில் கணவராக வெங்கட்பிரபுவும். மனைவியாக சினேகாவும் நடிக்கிறார்கள். தனுஷின் பட்டாஸ் படத்திற்கு பிறகு சினேகா நடிக்கும் படம். வெங்கட் பிரபு கடைசியாக கசடதபற படத்தில் நடித்திருந்தார்.
சினேகா நடிப்பது பற்றி அருணாச்சலம் வைத்தியநாதன் கூறியதாவது: ஆரம்பத்தில், நான் சினேகாவிடம் பேசியபோது, அவர் தயங்கினார், அவர் இதற்கு முன்பு அத்தகைய கேரக்டரை செய்யவில்லை என்று சொன்னார். ஆனால் நான் அவரிடம் கதையை விவரித்தவுடன், அவர் சிரித்துக் கொண்டே, நான் இதைச் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்கு பிறகு பிரசன்னா மற்றும் சினேகாவிடம் நல்ல நட்பில் இருக்கிறேன். அதானல் தான், நான் சினேகாவுடன் மீண்டும் பணியாற்ற முடிந்தது. இந்த படத்தில் சினேகா ஒரு வித்தியாசமான அம்மாவாக நடிக்கிறார். என்றார்.