லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் |
காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாளவிகா தற்போது சீரியலிலிருந்து விலகியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி தொடர் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தொடர் புதுமுக நடிகர்/நடிகைகளுக்கும் நிறைய வாய்ப்பை கொடுத்து அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடரில் நாயகனின் அம்மாவாக சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை மாளவிகா. இந்திய அளவில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான கே.ஜி.எப் படத்தில் ஜார்னஸ்ட் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்த மாளவிகா, தென்னிந்திய மொழிகளில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கே.ஜி.எப் 2, ருத்ரதாண்டவம், எனிமி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. காற்றுக்கென்ன வேலி தொடரிலும் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் தொடரை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சாரதா கதாபாத்தித்தில் புது நடிகை ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.