தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாளவிகா தற்போது சீரியலிலிருந்து விலகியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி தொடர் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தொடர் புதுமுக நடிகர்/நடிகைகளுக்கும் நிறைய வாய்ப்பை கொடுத்து அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடரில் நாயகனின் அம்மாவாக சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை மாளவிகா. இந்திய அளவில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான கே.ஜி.எப் படத்தில் ஜார்னஸ்ட் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்த மாளவிகா, தென்னிந்திய மொழிகளில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கே.ஜி.எப் 2, ருத்ரதாண்டவம், எனிமி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. காற்றுக்கென்ன வேலி தொடரிலும் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் தொடரை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சாரதா கதாபாத்தித்தில் புது நடிகை ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.