விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் நடுவன். சரண்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பரத் ஹீரோ. பைரவா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அபர்னா வினோத் ஹீரோயின். இவர்கள் தவிர கோகுல் ஆனந்த் பாலா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தரண்குமார் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர் சரண்குமார் கூறியதாவது: மனதார நேசிக்கும், நம்பும் நபர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியும்போது, என்ன செய்வீர்கள்? அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வீர்கள்? அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களா அல்லது அவர்களின் குற்றத்தை சொல்லி எதிர்ப்பீர்களா? என்பதுதான் படம்.
வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் நிவாஸ் என்கிற இளைஞனின் கதை. நிவாஸாக பரத் நடித்திருக்கிறார். நடுவன் என்றால் மத்தியதர வாழ்க்கை வாழ்கிறவன். மிடில் கிளாஸ் மேன் என்று பொருள்.
தன்னை ஏமாற்றியவர்களை கண்டுபிடிக்க முயல்கிறார். கதாநாயகன் அந்த பாதையில் செல்லும்போது, சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நேசித்து நம்பியவர்களின் ஏமாற்றுதல் மற்றும் வஞ்சத்தை அவர் கண்டுபிடித்து சமாளிக்க வேண்டும். இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில், அவர் செல்லும் போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. ஆனால் இந்த பயணத்தில் அவர் வெற்றி பெறுவாரா, அல்லது அவர் நேசிப்பவர்களுக்காக தனது அறியாமைக்கு அடிபணிவாரா? என்பதே கதை. என்றார்.