ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலகளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான ‛சர்வைவர் நிகழ்ச்சி முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செப்., 12 முதல் ஒளிபரப்பாகிறது. கமல், விஜய் சேதுபதி ஆகியோரை தொடர்ந்து நடிகர் அர்ஜூன் முதன் முறையாக இந்நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார்.
சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். தங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு போட்டியில் பல்வேறு விதமான சவால்களும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு யார் இறுதிவரை போட்டியில் உள்ளார்களோ அவர்களே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழில் முதன்முதலாக களமிறங்கி உள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ராந்த், உமாபதி ராமைய்யா, நந்தா, பெசன்ட் ரவி, நடிகைகள் விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இவர்கள் தவிர மேலும் 10 போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பற்றிய விபரம் சஸ்பென்ஸாக உள்ளது. ஆனால் மொத்தமாக 18 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளர்களான 8 பேரை பற்றி இங்கு பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் உறவினரான விக்ராந்த், ‛‛கற்க கடசற, முதல்கனவே, முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு, நெஞ்சில் துணிவிருந்தால், பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க இவர் போராடி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கு திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளார்.
விக்ராந்த் போன்றே நடிகர் நந்தாவும் சினிமாவில் தக்க இடத்தை பிடிக்க போராடி வருகிறார். ‛‛புன்னகை பூவே, கோடம்பாக்கம், ஈரம், வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து குணச்சித்ரம், வில்லன், ஹீரோ என பயணித்து வரும் இவர், இந்த சவாலான நிகழ்ச்சிகளில் களமிறங்கி உள்ளார்.
நடிகரும், இயக்குனருமான தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி. ‛‛அதகாப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது இரு படங்களில் நடித்து வரும் இவரும் கடினமான இந்த நிகழ்ச்சியில் களம் காண்கிறார்.
தமிழில் ஏகப்பட்ட படங்களில் வில்லனாக நடித்து இருப்பவர் பெசன்ட் ரவி. தற்போது காமெடி கலந்த குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வரும் இவர் சொந்தமாக ஓட்டலும் ஒன்றும் வைத்துள்ளார். இவரும் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கி சவால்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்.
சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகு நடிகை சிருஷ்டி டாங்கே. ‛‛யுத்தம் செய், மேகா, டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள கட்டில் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சவால்கள் நிறைந்த தனித்தீவில் அடர்ந்த காட்டுக்குள் தன்னாலும் ஜெயிக்க முடியும் என நம்பிக்கையோடு களமிறங்கி உள்ளார்.
இயக்குனர் அகத்தியனின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும் நடிகையாக ‛‛சென்னை 28, அஞ்சாதே, சென்னை 28-2, கசடதபற போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஏற்கனவே பிக்பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர் இந்தமுறை அதிக சவால்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
மாடல் அழகியாக இருந்து சினிமாவில் நுழைந்தவர் காயத்ரி ரெட்டி. முதல் படமே விஜய்யின் பிகில். அந்த படத்தில் விஜய்யின் மகளிர் கால்பந்து அணியில் முக்கிய வேடத்தில் நடித்தார். சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இவர் இந்த நிகழ்ச்சியில் களம் காண்கிறார்.