பிரபாஸ் படத்தில் கமல் நடிப்பதாக தகவல் | கங்குலியின் பயோபிக் படத்தை இயக்குகிறாரா ஜஸ்வர்யா ரஜினி? | தெலுங்கில் ரீமேக்காகிய 'டெடி' | இனி வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே : அனுஷ்கா ஷர்மா திடீர் முடிவு | தனுஷை இயக்கப் போகும் மரகத நாணயம் பட இயக்குனர் | ஆர்யா சொன்ன பிட்னஸ் ரகசியம் | ஐம்பதாவது படத்தில் சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கும் அஞ்சலி | இனி ரஜினி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை : அண்ணன் சொல்கிறார் | 'வீரன்' மூலம் மீண்டும் 'மீசைய முறுக்கு'வாரா ஹிப்ஹாப் தமிழா ? | காதலன் படத்தை இப்படியா வெளியிடுவது... மலைக்கா அரோராவை விளாசும் ரசிகர்கள் |
போதைப் பொருள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் சிலரை அமலாக்கப் பிரிவு கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் விசாரிக்கப்பட்டார். அவரிடம் கடந்த ஐந்து வருடங்களுக்கான வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை அமலாக்கத் துறையினர் பெற்றனர். நேற்று பூரி ஜெகன்னாத்தின் பிஸினஸ் பார்ட்னரும், நடிகையுமான சார்மி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று(செப்., 3) தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஐதராபாத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரகுல் நேரில் ஆஜரான வீடியோ வெளியாகி உள்ளது. இவரை தொடர்ந்து பாகுபலி புகழ் நடிகர் ராணா டகுபட்டி செப்டம்பர் 6ம் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் போதைப் பொருள் விவகாரத்தில் மும்பை அமலாக்கப் பிரிவு முன்பு ரகுல் ப்ரீத் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த 12 சினிமா பிரபலங்கள் விசாரணை வளையத்தில் உள்ளனர்.