'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். லாக்டவுன் காரணமாக அவ்வப்போது இடைவெளி விடப்பட்ட இப்படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூன்று பேருமே நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன்பே சமந்தா சென்றுவிட்ட நிலையில் இப்போது நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையே மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்ற சமந்தாவுக்கு நயன்தாரா கட்டியணைத்து வாழ்த்து கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவை, கேக் வெட்ட வைத்து, நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன், நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். அதையடுத்து கேக் வெட்டி அவரை படக்குழு வரவேற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.