இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். அவருடைய 43வது படமான 'மாறன்' படத்தில் நடித்து முடித்த தனுஷ் அடுத்து 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து வருகிறார். அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நாளை ஆகஸ்ட் 20 முதல் ஆரம்பமாகும் என ஜுன் மாதமே அறிவித்தார்கள்.
'திருச்சிற்றம்பலம்', தெலுங்கு இயக்குனர்கள் சேகர் கம்முலா இயக்க உள்ள படம், வெங்கி அட்லுரி இயக்க உள்ள படம் என தனுஷ் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானதால் எந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும், எந்தப் படம் முதலில் வரும் என்ற குழப்பம் நிலவியது.
அந்த சமயத்தில் தான், 'திருச்சிற்றம்பலம்' பட அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பை அறிவித்தார்கள். இப்போது 'நானே வருவேன்' படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்களாம். இதனால், தனுஷ் நடித்து அடுத்து 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்கள் வெளிவந்த பிறகே மற்ற படங்கள் வரும் எனத் தெரிகிறது.