ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு நடிப்பில் மாநாடு என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்த படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மாநாடு படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதையடுத்து விரைவில் மாநாடு படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாநாடு படம் திரைக்கு வந்தது தனது புதிய படத்தை தொடங்குகிறார் வெங்கட்பிரபு. அந்த படத்தில் கன்னட நடிகர் சுதீப் நாயகனாக நடிக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராக உள்ளதாம். சுதீப் நடிக்கும் இந்த படம் அஜித் நடித்த மங்காத்தா படத்தை போன்று ஒரு ஆக்சன் கதையில் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.