ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் சூர்யா வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின்போது 2007-2008ம் ஆண்டு முதல் 2008-2009ம் ஆண்டுக்கான வருமான வரி மதிப்பீடு செய்து 2011ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் சூர்யா தரப்பிலும் வருமானவரி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், நடிகர் சூர்யா 3 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.
இப்படியான நிலையில் தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால் வருமான வரி சட்டப்படி மாதம் ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் சூர்யா.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சோதனை நடந்து 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் நடிகர் சூர்யா தாமதமாகத்தான் தாக்கல் செய்துள்ளார். வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை. அதனால் வருமான வரி சட்டப்படி வரி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லை என்று நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு ஏற்கனவே நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.