டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நாற்பது வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சாரதா. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்தவர் இவர் தான். ஊர்வசி என்கிற பட்டம் பெற்ற இவர் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் பெற்றவர். இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக இவர் இறந்துவிட்டதாக சோஷியல் மீடியாவில் திடீரென ஒரு வதந்தி பரவியது.
இதனை தொடர்ந்து பலரும் சாரதாவுக்கு போன் செய்து விசாரிக்க, ரொம்பவே சங்கடப்பட்டு போனார் சாரதா. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “நான் உயிருடன் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்த நோய் நொடியும் இல்லை. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம்.. ஒருத்தரை பற்றி வதந்தி பரப்ப வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்க கூடாது..” என பதிலடி கொடுத்துள்ளார் சாரதா.