என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் அனிருத், ஹிப் ஆப் தமிழா ஆதி ஆகியோருடன் இணைந்து எதிர்நீச்சலடி... என்ற பாடலை பாடியவர் பிரபல பாலிவுட் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் யோயோ ஹனி சிங். ஹிர்தேஷ் சிங் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாபி மற்றும் பாலிவுட் படங்களில் பாடி இருக்கிறார்.
பஞ்சாபிலும், பாலிவுட்டிலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஹனி சிங்கின் மனைவி ஷாலினி தல்வார் கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஹனி சிங் மதுவுக்கு அடிமையாக விட்டதாகவும், தன்னை தேடி வரும் ரசிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். அதோடு தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், தன்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாபி முன்னணி நடிகை ஒருவர் உள்பட அவருக்குப் பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அதைத் தான் பலமுறை தட்டிக் கேட்டும் அவர் கேட்கவில்லை என்றும் ஷாலினி தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து வரும் 28ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு யோயோ ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.