சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு | என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் வெற்றி | பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் | பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் | பிளாஷ்பேக்: நாடகத்தால் வெற்றி பெற்ற படம் | துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்?? | மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம் |

மிகப்பெரிய படங்கள் பற்றிய அப்டேட் தகவல்களை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தாலும் கூட, சம்பந்தப்பட்ட யாருமே படம் பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறப்பதில்லை. அந்தவகையில் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அடுத்து ரிலீஸாக இருக்கும் அவரது ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா என்கிற தகவல்கள் கூட அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்தநிலையில் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே ரசிகர்களுடனான சோஷியல் மீடியா கலந்துரையாடலின்போது இன்னும் ராதே ஷ்யாம் படத்தில் பத்து நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இது காதல் கதை என்றாலும் வழக்கமான காதல் படங்கள் போல அல்லாமல், பக்குவப்பட்ட காதலை வெளிபடுத்தும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.




