'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மிகப்பெரிய படங்கள் பற்றிய அப்டேட் தகவல்களை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தாலும் கூட, சம்பந்தப்பட்ட யாருமே படம் பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறப்பதில்லை. அந்தவகையில் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அடுத்து ரிலீஸாக இருக்கும் அவரது ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா என்கிற தகவல்கள் கூட அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்தநிலையில் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே ரசிகர்களுடனான சோஷியல் மீடியா கலந்துரையாடலின்போது இன்னும் ராதே ஷ்யாம் படத்தில் பத்து நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இது காதல் கதை என்றாலும் வழக்கமான காதல் படங்கள் போல அல்லாமல், பக்குவப்பட்ட காதலை வெளிபடுத்தும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.