மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் |

மிகப்பெரிய படங்கள் பற்றிய அப்டேட் தகவல்களை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தாலும் கூட, சம்பந்தப்பட்ட யாருமே படம் பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறப்பதில்லை. அந்தவகையில் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அடுத்து ரிலீஸாக இருக்கும் அவரது ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா என்கிற தகவல்கள் கூட அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்தநிலையில் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே ரசிகர்களுடனான சோஷியல் மீடியா கலந்துரையாடலின்போது இன்னும் ராதே ஷ்யாம் படத்தில் பத்து நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இது காதல் கதை என்றாலும் வழக்கமான காதல் படங்கள் போல அல்லாமல், பக்குவப்பட்ட காதலை வெளிபடுத்தும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.