லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'நெற்றிக்கண்' என்ற படத்தைத் தயாரித்தனர்.
இப்படம் 2011ல் வெளிவந்த 'பிளைன்ட்' என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரைக் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிட்டார்கள். படத்தில் பார்வையற்றவராக நயன்தாரா நடித்துள்ளார். டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படம் ஆண்டு துவக்கத்திலேயே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதன்பின் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்வி வந்த நிலையில், படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் பரவியது.
அதை உறுதிபடுத்தி படத் தயாரிப்பாளர் சற்று முன் ஓடிடி வெளியீடு பற்றி உறுதிபடுத்தியுள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது. கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' ஓடிடியில் நேரடியாக வெளியாகியது. அதன்பின் நயன்தாராவின் அடுத்த வெளியீடான 'நெற்றிக்கண்' படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.