‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'நெற்றிக்கண்' என்ற படத்தைத் தயாரித்தனர்.
இப்படம் 2011ல் வெளிவந்த 'பிளைன்ட்' என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரைக் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிட்டார்கள். படத்தில் பார்வையற்றவராக நயன்தாரா நடித்துள்ளார். டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படம் ஆண்டு துவக்கத்திலேயே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதன்பின் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்வி வந்த நிலையில், படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் பரவியது.
அதை உறுதிபடுத்தி படத் தயாரிப்பாளர் சற்று முன் ஓடிடி வெளியீடு பற்றி உறுதிபடுத்தியுள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது. கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' ஓடிடியில் நேரடியாக வெளியாகியது. அதன்பின் நயன்தாராவின் அடுத்த வெளியீடான 'நெற்றிக்கண்' படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.