குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் | தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு' | பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி |
பைசா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரா. அதன்பிறகு ஒன்வே, தேவதாஸ் பிரதர்ஸ், குழலி படங்களில் நடித்தார். இந்த படங்கள் வெளிவரவில்லை. தற்போது காதல் புதிது என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆரா எதிர்பார்ப்பதெல்லாம் குழலி படத்தின் வெளியீட்டை. காரணம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை பெற்று வரும் அந்த படம் தனக்கு நல்ல திருப்பம் தரும் என்று நம்புகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: குழலியில் நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ் ஜோடியாக நடித்திருக்கிறேன். ஒரு கிராமத்து பெண்ணின் கல்வி கனவுகளை சொல்லும் படம் அது. அந்த படம் பல விருதுகளை குவித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில்கூட இந்தோ பிரஞ்ச் பட விழாவில் சிறந்த படம், சிறந்த இசை விருதுகளை பெற்றது. இந்த படம் தமிழ்நாட்டில் வெளிவரும்போது எனக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார்.