துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஷங்கர். ரஜினிகாந்தை வைத்து பல கோடிகளில் உருவான '2.0' படம் மூலம் இந்திய அளவிலும் பேசப்படுவோம் என எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறவில்லை. அடுத்து 'இந்தியன் 2' படத்தில் அந்த இந்திய சாதனையைச் செய்துவிடலாம் என எதிர்பார்த்தார். கடைசியில் முக்கால்வாசி படத்தை முடித்தபின் படத்தை அப்படியே விட்டுவிட்டு தெலுங்குப் பக்கம் போய்விட்டார்.
தெலுங்கில் ராம் சரண் நடிக்க பான்-இந்தியா வெளியீடாக புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். 'ஆர்சி 15' என்று அழைக்கப்படும் அப்படத்திற்கு தமன் இசையமைக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் ஒரு கதாநாயகனாக நடித்தவர் தமன். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். முதன் முதலாக ஷங்கர் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
ஷங்கர் இதுவரையிலும் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் ஆகியோரைத் தான் தனது படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிய வைத்துள்ளார். இப்போது அவர்களை விட்டு விலகி ஒரு பான்-இந்தியா படத்திற்கு தமனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பது ரஹ்மான், ஹாரிஸ், அனிருத் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.