இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஷங்கர். ரஜினிகாந்தை வைத்து பல கோடிகளில் உருவான '2.0' படம் மூலம் இந்திய அளவிலும் பேசப்படுவோம் என எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறவில்லை. அடுத்து 'இந்தியன் 2' படத்தில் அந்த இந்திய சாதனையைச் செய்துவிடலாம் என எதிர்பார்த்தார். கடைசியில் முக்கால்வாசி படத்தை முடித்தபின் படத்தை அப்படியே விட்டுவிட்டு தெலுங்குப் பக்கம் போய்விட்டார்.
தெலுங்கில் ராம் சரண் நடிக்க பான்-இந்தியா வெளியீடாக புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். 'ஆர்சி 15' என்று அழைக்கப்படும் அப்படத்திற்கு தமன் இசையமைக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் ஒரு கதாநாயகனாக நடித்தவர் தமன். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். முதன் முதலாக ஷங்கர் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
ஷங்கர் இதுவரையிலும் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் ஆகியோரைத் தான் தனது படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிய வைத்துள்ளார். இப்போது அவர்களை விட்டு விலகி ஒரு பான்-இந்தியா படத்திற்கு தமனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பது ரஹ்மான், ஹாரிஸ், அனிருத் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.