ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து ஜெயம் ரவி, விஜய்சேதுபதி என அடுத்தடுத்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ். கைவசம் தமிழிலேயே மூன்று படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரம் படத்தில் நடித்த இவர் விரைவில் வெளியாகவுள்ள விராட பர்வம் படத்திலும் சற்று நீட்டிக்கப்பட்ட கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
ராணா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சாய்பல்லவி மற்றும் பிரியாமணி ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தில் சாய்பல்லவியும், பிரியாமணியும் நக்சலைட்டாக நடித்துள்ளது போல, நிவேதா பெத்துராஜும் நக்சலைட் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளாராம். வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ளார்.