பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் | 'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? |
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என மக்களை அதிகமாகவே வாட்டி வதைத்தது. இதனால் தங்கள் உடல் நலன் மீது மக்களுக்கு அதிக அக்கறை வந்தது. வாக்கிங் போகாதவர்கள் கூட வாக்கிங் போக ஆரம்பித்தார்கள். உடற்பயிற்சி செய்யாதவர்கள் கூட உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.
இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வும் ஒரு லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தது. அதன் காரணமாக பழையபடி மக்களும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றமும் ஒரு விதத்தில் நல்லது தான். சைக்கிளிங் செல்வதற்காக தனியாக நேரத்தை ஒதுக்காமல் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு பதிலாக சைக்கிளில் சென்று வந்தால் அது உடற்பயிற்சியாகவும் மாறிவிடும்.
கடந்த வாரம் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சைக்கிளிங் பற்றி பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் சினிமாவின் சீனியர் நாயகிகளில் ஒருவரான திரிஷாவும் தன்னுடைய சைக்கிளிங் ஆரம்பித்துள்ளார்.
"இதுதான் என்னுடைய புதிய சைக்கிள். நல்ல மூடுக்கு ஒரு ரைட் போதும்", என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிஷாவை பார்த்து இனி பலரும் சைக்கிளிங் செல்ல ஆரம்பிப்பார்கள்.