அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
அன்பரசன் என்ற புதுமுகம் இயக்கும் படம் பேயை காணோம். இதில் புதுமுகம் கவுசிக் நாயகனாக நடிக்க, பரபரப்பு நடிகை மீரா மிதுன் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர இயக்குனர் தருண் கோபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
படம் பற்றி அன்பரசன் கூறியதாவது: காவல் நிலையங்களுக்கு காணவில்லை புகார் நிறைய வரும். முதன் முறையாக பேயை காணோம் என்று ஒருவர் புகார் செய்கிறார். அது ஏன், எதற்காக? என்பதே படத்தின் கதை. நகைச்சுவை கலந்த பேய் படமாக தயாராகி வருகிறது.
படத்திற்கு கவர்ச்சியும், துணிச்சலும் மிக்க நடிகை வேண்டும் என்பதால் மீரா மிதுனை தேர்வு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக நடித்தார். ஆனால் அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அவர் படப்பிடிப்பு தளத்தின் உள்ளேயே சிகரெட் பிடித்தார். அதனால் இப்படி செட்டுக்குள் சிகரெட் பிடிக்காதீர்கள். வெளியே கேரவன் நிற்கிறது. அங்கே போய் சிகரெட் புகைத்து விட்டு வாருங்கள் என்று செட்டை விட்டு அனுப்பி வைத்தேன். அதன்பிறகு அவர் செட்டுக்குள் புகைபிடிப்பதில்லை. என்றார்.