செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' |
அன்பரசன் என்ற புதுமுகம் இயக்கும் படம் பேயை காணோம். இதில் புதுமுகம் கவுசிக் நாயகனாக நடிக்க, பரபரப்பு நடிகை மீரா மிதுன் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர இயக்குனர் தருண் கோபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
படம் பற்றி அன்பரசன் கூறியதாவது: காவல் நிலையங்களுக்கு காணவில்லை புகார் நிறைய வரும். முதன் முறையாக பேயை காணோம் என்று ஒருவர் புகார் செய்கிறார். அது ஏன், எதற்காக? என்பதே படத்தின் கதை. நகைச்சுவை கலந்த பேய் படமாக தயாராகி வருகிறது.
படத்திற்கு கவர்ச்சியும், துணிச்சலும் மிக்க நடிகை வேண்டும் என்பதால் மீரா மிதுனை தேர்வு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக நடித்தார். ஆனால் அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அவர் படப்பிடிப்பு தளத்தின் உள்ளேயே சிகரெட் பிடித்தார். அதனால் இப்படி செட்டுக்குள் சிகரெட் பிடிக்காதீர்கள். வெளியே கேரவன் நிற்கிறது. அங்கே போய் சிகரெட் புகைத்து விட்டு வாருங்கள் என்று செட்டை விட்டு அனுப்பி வைத்தேன். அதன்பிறகு அவர் செட்டுக்குள் புகைபிடிப்பதில்லை. என்றார்.