ஜுன் 9ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 66 கோடி வசூலித்ததாக அறிவிப்பு | அதிதி ஷங்கரைப் பாராட்டிய எஸ்ஜே சூர்யா | 10 கதாநாயகிகள் கலந்து கொள்ளும் 'லெஜன்ட்' இசை வெளியீட்டு விழா | விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் |
ஒரு காலத்தில் சினிமாவில் லட்ச ரூபாய் சம்பளம் என்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அதன்பின் அது ஒரு கோடியாக மாறியது. இப்போது 100 கோடி சம்பளம் வாங்குபவர்களைப் பார்த்து ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது ரஜினிகாந்தும், விஜய்யும் தான் 100 கோடி சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். நாயகிகளில் அதிக பட்சமாக நயன்தாரா 4 கோடி வரை வாங்குகிறார் என்று தகவல்.
தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலேயே நாயகர்களுக்கு இணையான சம்பளம் வாங்கியவர் பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாள். அவர் லட்ச ரூபாய் வாங்கிய சம்பளம் பற்றி இப்போதும் பேசுவார்கள்.
ஆனால், காலம் மாறினாலும் நாயகிகள் வாங்கும் சம்பளம் பற்றித்தான் அதிகமாகப் பேசுகிறார்கள். அதிகபட்சமாக இந்தியாவில் நாயகிகளுக்கு 10 கோடி சம்பளம் என்பதே அதிகமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம் நாயகர்கள் 100 கோடி வாங்கினாலும் அதைப் பற்றிப் பெரிதாகப் பேச மாட்டார்கள்.
சமீபத்தில் ஹிந்தி நடிகையான கரினா கபூர் 'சீதா' படத்தில் நடிப்பதற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை டாப்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
“கரீனா கபூர் நமது திரையுலகத்தில் உள்ள ஒரு பெரிய பெண் சூப்பர் ஸ்டார். அவரது காலத்தில் அவர் அப்படி சம்பளம் கேட்பது நியாயமானதுதான். அதுதானே அவருடைய வேலை. ஒரு நடிகர் அவரது சம்பளத்தை உயர்த்தும் போது அது யாருக்கும் பிரச்சினையாகத் தெரியவில்லை. அதே சமயம் ஒரு நடிகை அவரது சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் அது சர்ச்சையாக்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.