நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
முதன்முதலில் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானாலும், நடிகர் பிரபுதேவாவை ஸ்டார் இயக்குனர் அந்தஸ்திற்கு உயர்த்தியது பாலிவுட் திரையுலகம் தான். அதைத்தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனராகவும் இரட்டை குதிரை சவாரி செய்து வந்த பிரபுதேவா, கடந்த மூன்று வருடங்களில், ஹிந்தியில் சல்மான்கானை வைத்து தபாங்-3 மற்றும் சமீபத்தில் வெளியான ராதே என இரண்டு படங்களை இயக்கினார். இரண்டுமே தோல்விப்பட வரிசையில் தான் இடம் பிடித்தன.
இதனால் ஒரு வெற்றிப்படம் தந்து, தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரபுதேவா. அதேசமயம் இனி நேரடி கதைகளை நம்பாமல், தனக்கு எப்போதும் கை கொடுக்கும் ரீமேக்கையே இந்த முறையும் கையில் எடுக்க உள்ளாராம் பிரபுதேவா.
அந்தவகையில் ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டான ஒரு படத்தை தான் ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலா ஏற்கனவே வாங்கியுள்ளார். இதன் ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள், இது எந்த படத்தின் ரீமேக் என்பது குறித்து, தற்போதைக்கு படத்தின் தயாரிப்பாளரும், பிரபுதேவாவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளார்களாம்.