'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் கிச்சா சுதீப்பை பொறுத்தவரை கன்னடத்தில் ஹீரோவாகவும், மற்ற மொழிகளில் வில்லன், குணச்சித்திர நடிகர் எனவும் இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். அந்தவகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கு வரவேற்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில் நெற்றிக்கண் படத்தை தொடர்ந்து மீண்டும் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நயன்தாரா நடிக்க, அந்தப்படத்தில் வில்லனாக நடிக்க சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்க உள்ளதாம். ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான காஸ்மோரா படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.