உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' |
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தமிழக முதல்வரிடம் 2 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அதை தொடர்ந்து பெப்சி தொழிலாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியது. இதற்கான காசோலையை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆர்.கே.செல்மணி கூறியதாவது: கொரோனா தொற்றின் முதல் அலையை விட இந்த முறை தான் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை திரைப்பட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். கடந்த முறை நடிகர், நடிகைகள் அதிக அளவில் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இந்த ஆண்டு குறைவாக இருக்கிறது. தற்போது லைக்கா நிறுவனம் கொடுத்திருக்கும் தொகைதான் அதிகமானது. நடிகர், நடிகைகள் இன்னும் உதவ வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தியேட்டர்களும் திறக்கப்பட்டு நிலைமை சீராகும் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறோம். என்றார்.