பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'லிகர்'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இப்படத்தை ஓடிடியில் வெளியிட ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும், அது சம்பந்தமாக தயாரிப்பாளர்களிடம் பேசி வருவதாகவும் மீம் ஒன்றுடன் செய்தி வெளியாகி இருந்தது.
அதைப் பகிர்ந்து, “ரொம்ப குறைவு, தியேட்டர்களில் இதைவிட அதிகம் செய்வேன்,” கிண்டலாக பதிலளித்திருந்தார்.
தெலுங்கில் தற்போது தயாராகி வரும் பல படங்கள் பான் - இந்தியா படங்களாக தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் வெளியிடும் வகையில் தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் 'லிகர்' படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடியக் கூட இல்லை, அதற்குள் ஓடிடி வெளியீடு, 200 கோடி, தயாரிப்பாளர் பேச்சு வார்த்தை என யாரோ செய்தி வெளியிட்டுள்ளார்கள்.