ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'லிகர்'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இப்படத்தை ஓடிடியில் வெளியிட ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும், அது சம்பந்தமாக தயாரிப்பாளர்களிடம் பேசி வருவதாகவும் மீம் ஒன்றுடன் செய்தி வெளியாகி இருந்தது.
அதைப் பகிர்ந்து, “ரொம்ப குறைவு, தியேட்டர்களில் இதைவிட அதிகம் செய்வேன்,” கிண்டலாக பதிலளித்திருந்தார்.
தெலுங்கில் தற்போது தயாராகி வரும் பல படங்கள் பான் - இந்தியா படங்களாக தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் வெளியிடும் வகையில் தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் 'லிகர்' படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடியக் கூட இல்லை, அதற்குள் ஓடிடி வெளியீடு, 200 கோடி, தயாரிப்பாளர் பேச்சு வார்த்தை என யாரோ செய்தி வெளியிட்டுள்ளார்கள்.