அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
இந்தியாவில் இதுவரை ஒளிபரப்பான வெப் சீரிஸ்களில் அதிக பார்வையாளர்களை பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது தி பேமிலி மேன் 2. இதன் முதல் பாகமும் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஜெயவந்த் காசிநாத், திருத்தி திவாரி, சாஜித கஹானி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இது இந்தியாவுக்கு எதிராக திட்டமிடும் காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய கதை.
சமீபத்தில் வெளியான 2வது சீசன் கதையில் இந்தியாவில் ஒரு வெடிகுண்டு திட்டத்தை செயல்படுத்த இலங்கை தீவிரவாத குழு ஒன்றும், பாகிஸ்தான் உளவு பிரிவும் திட்டமிடுவதான கதை. இந்த சீரிசின் பெரும்பகுதி கதை சென்னையில் நடப்பதால், இதன் படப்பிடிப்புகளும் சென்னையில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் சீரியலின் இயக்குனர்கள், ராஜ் மற்றும் டீகேவும், நடிகர் மனோஜ் பாஜ்பாயும் விஜய் சேதுபதியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
இந்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. 2வது சீசன் பற்றிய புரமோசன்களில் பேசி வரும் மனோஜ் பாஜ்பாய் சென்னையில் விஜய் சேதுபதியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். "நான் விஜய் சேதுபதியை சந்திக்க விரும்பியபோது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். நாங்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவு செய்தோம். சென்னையின் உண்மையான மனிதர்களைப் பார்க்க விரும்பினேன் அதற்கான சந்திப்புதான் இது" என்று மனோஜ் பாஜ்பாய் இந்த சந்திப்பு பற்றி கூறியிருக்கிறார்.
2வது சீசனில் சமந்தா இலங்கையை சேர்ந்த தீவிரவாத பெண்ணாக நடித்திருந்தார். இந்த தொடரில் இலங்கை போராளி குழு தலைவர் பாஸ்கரனாக நடிக்க விஜய் சேதுபதியைத்தான் முதலில் அணுகியதாகவும், அவர் நடிக்க மறுத்து அவர் தான் மைம்கோபியை சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தி பேமிலி மேன் சீரிசின் 3வது சீசனில் நடிக்க விஜய்சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாவும், அதற்காக நடந்த சந்திப்புதான் இது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.