பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
கொரோனாவால் மரணிக்கும் திரைப்பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்று(ஜூன் 17) தொரட்டி படம் நாயகன் ஷமன்மித்ரு (வயது 43) காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.
சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான ஷமன்மித்ரு தமிழ், தெலுங்கு , கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி கொள்ள தொரட்டி படத்தை தயாரித்து, கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 5 வயதில் மோக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
கே.வி.ஆனந்த், மாறன், சேலம் சந்திரசேகர், பாண்டு, குட்டி ரமேஷ், நிதிஷ் வீரா, வெங்கட் சுபா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனாவால் மரணம் அடைந்த நிலையில் இப்போது இவரின் மரணமும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.