‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
இயக்குனர் வசந்தபாலன் மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் நெருங்கிய நண்பர். வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படம் இன்னும் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் அவர் தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் பட வில்லன் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஜீ.பி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
கதைப்படி இந்த படத்தின் நாயகி ஒரு பண்பலை வானொலியில் தொகுப்பாளராக இருக்கிறவர். அதோடு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் தீவிர ரசிகர். அதனால் ஒரு காதல் காட்சியில் ஹீரோ அர்ஜூன் தாஸ், தன் காதலியை இம்பரஸ் செய்ய நா.முத்துகுமாரின் கவிதை வரிகளை பாடலாக்கி பாட வேண்டும். இது பாடலுக்கான சூழ்நிலை.
இதற்கு நா.முத்துகுமாரின் ஒரு கவிதையை அப்படியே பாடலாக்க முதலில் திட்டமிடடிருந்தார்கள். இப்போது அதையே போட்டியாக மாற்றி இருக்கிறார்கள். அதாவது நா.முத்துகுமாரின் சிறந்த கவிதை வரிகளை தேர்வு செய்து, அதில் சின்ன சின்ன மாறுதல்கள் செய்து ஒரு பாடலாக உருவாக்க வேண்டும்.
இதில் சிறப்பாக தொகுக்கப்பட்ட பாடலுக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் கவுரவமும், சிறப்பும், சன்மானமும் வழங்கப்படும் என்று வசந்தபாலன் அறிவித்துள்ளார். பாடல் வருகிற 30ந் தேதிக்குள் கிடைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.