ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

இயக்குனர் வசந்தபாலன் மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் நெருங்கிய நண்பர். வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படம் இன்னும் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் அவர் தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் பட வில்லன் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஜீ.பி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
கதைப்படி இந்த படத்தின் நாயகி ஒரு பண்பலை வானொலியில் தொகுப்பாளராக இருக்கிறவர். அதோடு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் தீவிர ரசிகர். அதனால் ஒரு காதல் காட்சியில் ஹீரோ அர்ஜூன் தாஸ், தன் காதலியை இம்பரஸ் செய்ய நா.முத்துகுமாரின் கவிதை வரிகளை பாடலாக்கி பாட வேண்டும். இது பாடலுக்கான சூழ்நிலை.
இதற்கு நா.முத்துகுமாரின் ஒரு கவிதையை அப்படியே பாடலாக்க முதலில் திட்டமிடடிருந்தார்கள். இப்போது அதையே போட்டியாக மாற்றி இருக்கிறார்கள். அதாவது நா.முத்துகுமாரின் சிறந்த கவிதை வரிகளை தேர்வு செய்து, அதில் சின்ன சின்ன மாறுதல்கள் செய்து ஒரு பாடலாக உருவாக்க வேண்டும்.
இதில் சிறப்பாக தொகுக்கப்பட்ட பாடலுக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் கவுரவமும், சிறப்பும், சன்மானமும் வழங்கப்படும் என்று வசந்தபாலன் அறிவித்துள்ளார். பாடல் வருகிற 30ந் தேதிக்குள் கிடைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.