ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இயக்குனர் வசந்தபாலன் மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் நெருங்கிய நண்பர். வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படம் இன்னும் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் அவர் தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் பட வில்லன் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஜீ.பி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
கதைப்படி இந்த படத்தின் நாயகி ஒரு பண்பலை வானொலியில் தொகுப்பாளராக இருக்கிறவர். அதோடு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் தீவிர ரசிகர். அதனால் ஒரு காதல் காட்சியில் ஹீரோ அர்ஜூன் தாஸ், தன் காதலியை இம்பரஸ் செய்ய நா.முத்துகுமாரின் கவிதை வரிகளை பாடலாக்கி பாட வேண்டும். இது பாடலுக்கான சூழ்நிலை.
இதற்கு நா.முத்துகுமாரின் ஒரு கவிதையை அப்படியே பாடலாக்க முதலில் திட்டமிடடிருந்தார்கள். இப்போது அதையே போட்டியாக மாற்றி இருக்கிறார்கள். அதாவது நா.முத்துகுமாரின் சிறந்த கவிதை வரிகளை தேர்வு செய்து, அதில் சின்ன சின்ன மாறுதல்கள் செய்து ஒரு பாடலாக உருவாக்க வேண்டும்.
இதில் சிறப்பாக தொகுக்கப்பட்ட பாடலுக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் கவுரவமும், சிறப்பும், சன்மானமும் வழங்கப்படும் என்று வசந்தபாலன் அறிவித்துள்ளார். பாடல் வருகிற 30ந் தேதிக்குள் கிடைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.




