ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் மக்கள் அனைவரிடத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதோடு பல நடிகர்-நடிகைகள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டு போட்டுக் கொண்டுள்ளார். அதையடுத்து தனது மகனுடன் மாஸ்க் அணிந்த ஒரு செல்பியையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ‛‛நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டு வீட்டீர்களா?'' என்றும் பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.