ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
தி பேமிலிமேன் 2 வெப்சீரிஸ் வெளியாகி விட்டதை அடுத்து தான் ஏற்கனவே நடித்து வந்த சகுந்தலம் புராண படத்தில் கவனத்தை திருப்பியிருக்கிறார் சமந்தா. குணசேகர் இயக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ்மோகன் நாயகனாக நடிக்கிறார்.
மேலும், சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு மே 10ம் தேதி வரை சுமார் 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று தீவிரமானபோது படப்பிடிப்பில் கலந்து கொள்ள சமந்தா தயங்கியதால் பல நாட்களில் சமந்தா இல்லாமலேயே காட்சிகள் படமாகி வந்தது. அதோடு இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் 10 நாட்கள் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது இப்படத்திற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் கூடிய சீக்கிரமே மீண்டும் சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் சமந்தா. அதோடு, வழக்கமான படப்பிடிப்புகளை போல் அல்லாமல் காலை 6 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை மட்டுமே படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளதாம்.