ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி | இந்தியாவில் அதிக பிரபலமான நடிகைகள் : டாப் 10ல் தென்னிந்திய நடிகைகள் ஆதிக்கம் | இந்தியாவின் அதிக பிரபல நடிகர் : நம்பர் 1 விஜய், நம்பர் 6 அஜித்குமார் | ஜுன் 9ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 66 கோடி வசூலித்ததாக அறிவிப்பு | அதிதி ஷங்கரைப் பாராட்டிய எஸ்ஜே சூர்யா | 10 கதாநாயகிகள் கலந்து கொள்ளும் 'லெஜன்ட்' இசை வெளியீட்டு விழா | விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் |
தமிழில் 'நேரம்', மலையாளத்தில் 'பிரேமம்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். பேஸ்புக்கில் பரபரப்பாக செயல்படும் பிரபலங்களில் ஒருவர். அவருடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டால் சிலவற்றிற்கு பதில் சொல்வார். அப்படி ஒரு ரசிகர், “ஒரு படத்தை எப்படி உருவாக்க வேண்டும், என்னிடம் நல்ல கதை கைவசம் உள்ளது, புதியவர்களுக்கு ஒரு 'டிப்' சொல்லுங்களேன்,” எனக் கேட்டார்.
அதற்கு அல்போன்ஸ் புத்திரன், “ஒரு தயாரிப்பாளரைத் தேடுங்கள், அதை செயலாக்குங்கள். உங்களால் தயாரிப்பாளரைப் பிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கேளுங்கள், பணத்தைப் பெற்று உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
மேலே செல்லும் போது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதீர்கள், காரணம் அது உங்களை கீழிறக்கியும் விடும். அவர்கள் உங்களுக்காகக் காத்திருப்பார்கள். அதனால், உங்களுக்கு யார் நல்லது செய்கிறார்களா அவர்களுடன் கனிவாக இருங்கள். இந்த செயலாக்கத்தில் உங்களை ஏமாற்றுபவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் திட்டம் படம் தயாரிப்பாதாக மட்டும் இருக்க வேண்டும், உங்களை ஏமாற்றுபவர்களை தண்டிப்பதாக இருக்கக் கூடாது.
மேலிருந்தும், கீழிருந்தும், கிழக்கு, மேற்கிலிருந்தும் கவனச்சிதறல்கள் வரும். நம்பிக்கையுடன் உங்கள் மனதில் இருப்பதை உருவாக்குங்கள், உங்கள் நோக்கம் சரியானதாக இருந்தால் அந்த நோக்கமே உங்களைக் காப்பாற்றிவிடும்,” என பதிலளித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரனின் இந்த ஆலோசனைக்கு அவரது பாலோயர்கள் பலரும் லைக் கொடுத்துள்ளார்கள்.