'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
தமிழில் 'நேரம்', மலையாளத்தில் 'பிரேமம்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். பேஸ்புக்கில் பரபரப்பாக செயல்படும் பிரபலங்களில் ஒருவர். அவருடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டால் சிலவற்றிற்கு பதில் சொல்வார். அப்படி ஒரு ரசிகர், “ஒரு படத்தை எப்படி உருவாக்க வேண்டும், என்னிடம் நல்ல கதை கைவசம் உள்ளது, புதியவர்களுக்கு ஒரு 'டிப்' சொல்லுங்களேன்,” எனக் கேட்டார்.
அதற்கு அல்போன்ஸ் புத்திரன், “ஒரு தயாரிப்பாளரைத் தேடுங்கள், அதை செயலாக்குங்கள். உங்களால் தயாரிப்பாளரைப் பிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கேளுங்கள், பணத்தைப் பெற்று உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
மேலே செல்லும் போது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதீர்கள், காரணம் அது உங்களை கீழிறக்கியும் விடும். அவர்கள் உங்களுக்காகக் காத்திருப்பார்கள். அதனால், உங்களுக்கு யார் நல்லது செய்கிறார்களா அவர்களுடன் கனிவாக இருங்கள். இந்த செயலாக்கத்தில் உங்களை ஏமாற்றுபவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் திட்டம் படம் தயாரிப்பாதாக மட்டும் இருக்க வேண்டும், உங்களை ஏமாற்றுபவர்களை தண்டிப்பதாக இருக்கக் கூடாது.
மேலிருந்தும், கீழிருந்தும், கிழக்கு, மேற்கிலிருந்தும் கவனச்சிதறல்கள் வரும். நம்பிக்கையுடன் உங்கள் மனதில் இருப்பதை உருவாக்குங்கள், உங்கள் நோக்கம் சரியானதாக இருந்தால் அந்த நோக்கமே உங்களைக் காப்பாற்றிவிடும்,” என பதிலளித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரனின் இந்த ஆலோசனைக்கு அவரது பாலோயர்கள் பலரும் லைக் கொடுத்துள்ளார்கள்.