தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
தமிழில் 'நேரம்', மலையாளத்தில் 'பிரேமம்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். பேஸ்புக்கில் பரபரப்பாக செயல்படும் பிரபலங்களில் ஒருவர். அவருடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டால் சிலவற்றிற்கு பதில் சொல்வார். அப்படி ஒரு ரசிகர், “ஒரு படத்தை எப்படி உருவாக்க வேண்டும், என்னிடம் நல்ல கதை கைவசம் உள்ளது, புதியவர்களுக்கு ஒரு 'டிப்' சொல்லுங்களேன்,” எனக் கேட்டார்.
அதற்கு அல்போன்ஸ் புத்திரன், “ஒரு தயாரிப்பாளரைத் தேடுங்கள், அதை செயலாக்குங்கள். உங்களால் தயாரிப்பாளரைப் பிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கேளுங்கள், பணத்தைப் பெற்று உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
மேலே செல்லும் போது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதீர்கள், காரணம் அது உங்களை கீழிறக்கியும் விடும். அவர்கள் உங்களுக்காகக் காத்திருப்பார்கள். அதனால், உங்களுக்கு யார் நல்லது செய்கிறார்களா அவர்களுடன் கனிவாக இருங்கள். இந்த செயலாக்கத்தில் உங்களை ஏமாற்றுபவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் திட்டம் படம் தயாரிப்பாதாக மட்டும் இருக்க வேண்டும், உங்களை ஏமாற்றுபவர்களை தண்டிப்பதாக இருக்கக் கூடாது.
மேலிருந்தும், கீழிருந்தும், கிழக்கு, மேற்கிலிருந்தும் கவனச்சிதறல்கள் வரும். நம்பிக்கையுடன் உங்கள் மனதில் இருப்பதை உருவாக்குங்கள், உங்கள் நோக்கம் சரியானதாக இருந்தால் அந்த நோக்கமே உங்களைக் காப்பாற்றிவிடும்,” என பதிலளித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரனின் இந்த ஆலோசனைக்கு அவரது பாலோயர்கள் பலரும் லைக் கொடுத்துள்ளார்கள்.