சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ்த் திரையுலகில் சில வெற்றிகரமான படங்களைக் கொடுத்த இயக்குனர் எஸ்ஜே சூர்யா, தற்போது கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்ர நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார். அவருடைய நடிப்புக்கெனவும் தனி ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அது 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நன்றாகவே எதிரொலித்தது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்ஜே சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா தேவரியா மற்றும் பலர் நடித்த 'இறைவி' படம் வெளிவந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது.
அப்படத்தை நினைவு கூர்ந்து படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், 'இறைவி 5 வருடங்கள், என் மனதுக்கும், பலரது மனதுக்கும் எப்போதும் நெருக்கமான ஒரு படம். சீன் ஆர்டரின் முதல் வடிவ கடைசி பக்கம் இதோ” என படத்திற்காக எழுதிய அந்த கடைசி பக்கத்தையும் டுவீட் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள எஸ்ஜே சூர்யா, “இப்படம் நமது சினிமா உலகத்தில் ஒரு மைல் கல்லான படம், நன்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இப்படத்தில் என்னையும் தேர்வு செய்து ஒரு பார்ட்டாக இருக்க வைத்தீர்கள். அந்த ரயில்வே ஸ்டேஷன் காட்சியை நீங்கள் படமாக்கிய அந்த நாளை இன்னும் மறக்க முடியாது,” என படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் 'குஷி' படம் பற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அப்பட கிளைமாக்ஸ் பற்றி அவர் சொன்னது வைரலானது. இப்போது 'இறைவி' படத்தின் கிளைமாக்ஸ் பற்றியும் அவர் சொல்லியிருக்கிறார். இரண்டு படங்களிலும் கிளைமாக்ஸ் காட்சி ரயில்வே ஸ்டேஷன் சம்பந்தப்பட்டுள்ளது என்பது ஓர் ஒற்றுமை.