விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தெலுங்குத் திரையுலகில் பெரும் நடிகராக விளங்கியவரும், ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராக இருந்தவருமான மறைந்த என்.டி.ராமராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
என்.டி.ராமராவின் 98வது பிறந்தநாளை இன்று ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாடி வருகிறார்கள். நடிகராக இருந்த என்டிஆர், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் பாணியைப் பின்பற்றி தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார். 1982ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 1983ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல் முறை முதல்வராகப் பதிவியேற்றார் என்டிஆர். மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த என்டிஆர் 1996ம் ஆண்டு மறைந்தார்.
“அசாமிய பாடகரும், இசைக்கலைஞருமான பூபேன் ஹசரிகாவிற்கு எப்படி மரணத்திற்குப் பின்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ அதுபோல வழங்கப்பட வேண்டும். அவருடைய நூறாவது பிறந்தநாள் வர உள்ள நிலையில் அந்த உயரிய விருது வழங்கி அவரை கவுரவிக்க வேண்டும். அவருக்கு வழங்கப்படும் விருது தெலுங்கு மக்களுக்கான கவுரவமாகவும் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.