இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்குத் திரையுலகில் பெரும் நடிகராக விளங்கியவரும், ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராக இருந்தவருமான மறைந்த என்.டி.ராமராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
என்.டி.ராமராவின் 98வது பிறந்தநாளை இன்று ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாடி வருகிறார்கள். நடிகராக இருந்த என்டிஆர், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் பாணியைப் பின்பற்றி தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார். 1982ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 1983ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல் முறை முதல்வராகப் பதிவியேற்றார் என்டிஆர். மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த என்டிஆர் 1996ம் ஆண்டு மறைந்தார்.
“அசாமிய பாடகரும், இசைக்கலைஞருமான பூபேன் ஹசரிகாவிற்கு எப்படி மரணத்திற்குப் பின்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ அதுபோல வழங்கப்பட வேண்டும். அவருடைய நூறாவது பிறந்தநாள் வர உள்ள நிலையில் அந்த உயரிய விருது வழங்கி அவரை கவுரவிக்க வேண்டும். அவருக்கு வழங்கப்படும் விருது தெலுங்கு மக்களுக்கான கவுரவமாகவும் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.