சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஓவியா ஹெலனுக்கு அதன்பிறகு சரியான படங்கள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகி ஓவியா ஆர்மியெல்லாம் தொடங்கினார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சினிமாவில் அவர் டாப்பிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதையடுத்து களவாணி 2 படம் மட்டுமே அவர் நடித்து வெளியே வந்தது. அந்த படமும் ஓடவில்லை. ஆனபோதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை வைத்து சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கிறார். இந்தநிலையில், தற்போது தனது டுவிட்டரில் மீடூ குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், நேர்மையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். மீடூ குறித்து வெளியில் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்பது எனக்கு புரிகிறது என்று பதிவிட்டுள்ளார். ஆனால் எந்த விசயத்தை மனதில் கொண்டு இப்படியொரு டுவீட்டை ஓவியா ஹெலன் தற்போது பதிவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.




