புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஓவியா ஹெலனுக்கு அதன்பிறகு சரியான படங்கள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகி ஓவியா ஆர்மியெல்லாம் தொடங்கினார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சினிமாவில் அவர் டாப்பிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதையடுத்து களவாணி 2 படம் மட்டுமே அவர் நடித்து வெளியே வந்தது. அந்த படமும் ஓடவில்லை. ஆனபோதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை வைத்து சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கிறார். இந்தநிலையில், தற்போது தனது டுவிட்டரில் மீடூ குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், நேர்மையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். மீடூ குறித்து வெளியில் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்பது எனக்கு புரிகிறது என்று பதிவிட்டுள்ளார். ஆனால் எந்த விசயத்தை மனதில் கொண்டு இப்படியொரு டுவீட்டை ஓவியா ஹெலன் தற்போது பதிவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.