27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ | நேர்மையாக இருந்தால் ஜொலிக்கலாம் நடிகர் குரு லக் ஷ்மண் | பிளாஷ்பேக்: பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் முதல் வண்ணத்திரைக் காவியங்களை அலங்கரித்த 'மக்கள் திலகம்' எம் ஜி ஆர் | ராஜபார்ட் ரங்கதுரை, வாலி, காஞ்சனா 3 - ஞாயிறு திரைப்படங்கள் | படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' |
ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் 'டர்ட்டி பொண்டாட்டி', பார்ட்டி படத்தில் "ஜிஎஸ்டி...", ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து "அப்படிப் பாக்காதடி", வஞ்சகர் உலகம் படத்தில் "கண்ணனின் லீலை" உள்ளிட்ட பல பாடல்களை பாடியிருப்பவர் ஸ்வாகதா.
சமீபத்தில் ஸ்வாதகா இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட "அடியாத்தே" என்ற ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது காயல் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஸ்வாதகா. ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கியுள்ளார்.
சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கருவைக் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது. கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
நடிகை ஆனது பற்றி ஸ்வாதகா கூறியதாவது: நான் நடிக்க வந்ததற்கு காரணமே என் தங்கை தான். அவள் தான் என்னை தொடர்ந்து வற்புறுத்தி ஆர்வத்தை ஏற்படுத்தினாள். நடிப்பு திறமையை வளர்த்துக் கொள்ள என்னை தியேட்டர் ஆர்ட்சில் பயிற்சிக்கு அனுப்பியதும் அவள்தான். காயல் தவிர தெலுங்கு படம் ஒன்றிலும் தற்போது நடித்து வருகிறேன். என்றார்.