ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் உள்ளது என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிந்தைய சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவை சாதனை விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள தெரிவிக்கின்றன. அனைத்து மொழிகளுக்குமான அந்த உரிமையை ஜீ நிறுவனம் சுமார் 325 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த வருடம் ஸ்டார் இந்தியா நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், அவர்களுடனான பேச்சு வார்த்தை ஒப்பந்தம் வரை போகவில்லை என்கிறார்கள்.
இந்த சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனையுடன் சேர்த்து அனைத்து விதமான வியாபாரத்தையும் 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் முடித்துவிட்டார்களாம். டேபிள் பிராபிட்டாக மட்டும் சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வந்திருக்கும் என்கிறார்கள். ஒட்டு மொத்த வியாபாரமும் 800 கோடி ரூபாயைக் கடந்திருக்கலாம் என்றும் தகவல்.
இந்தியத் திரையுலகில் இதுவரையில் எந்த ஒரு படமும் வெளியீட்டிற்கு முன்பே இந்த அளவிற்கு ஒரு வியாபாரத்தைப் பண்ணதில்லை என்றே பாலிவுட்டில் சொல்கிறார்கள்.
ராஜமவுலி இந்தியத் திரையுலகின் முதன்மை இயக்குனராக இப்படம் மூலம் உயர்ந்துவிடுவார் என்பதால் தெலுங்குத் திரையுலகினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.