என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'இந்தியன் 2' பட விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைகா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டு வழக்கு மீண்டும் நீதிமன்றம் பக்கமே சென்றது.
இந்தியன் 2' படத்தை முடிக்கும் வரையில் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற லைகாவின் கோரிக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், தயாரிப்பு நிறுவனம் மீதே குற்றச்சாட்டுகளை வைத்தார் ஷங்கர்.
அதனால் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ள லைகா நிறுவனம் ஷங்கர் மீது அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் ஷங்கர் மீது புகார் கொடுத்துள்ளார்களாம். தங்களது 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுத்த பிறகே அவர் தெலுங்கு, ஹிந்தியில் ஒப்பந்தமாகியுள்ள படங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்தில் வடிவேலு மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து அவரை படங்களில் நடிக்க வைக்க விடாமல் மறைமுக அழுத்தம் கொடுத்தவர் ஷங்கர் என கோலிவுட்டில் சொல்கிறார்கள். அதே பார்முலாவைப் பயன்படுத்தி ஷங்கரையும் தடுக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் முயல்கிறதாம்.