மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தென்னிந்திய சினிமாக்களில் வெளியாகும் பெரும்பாலான படங்களை விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் துவம்சம் செய்து வருபவர் புளூ சட்டை மாறன். இதனால் சினிமா உலகில் அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், நானும் ஒரு படம் எடுக்கப் போகிறேன் என்று களமிறங்கினார் மாறன். அதையடுத்து ஊரில் வெளியாகும் படங்களையெல்லாம் கண்டபடி விமர்சிக்கும் இவர் எடுக்கும் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்ப்போமே என்று கோலிவுட்டில் பல பிரபலங்களும் காத்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் பலவிதமான எதிர்ப்புகள், சவால்களுக்கு மத்தியில், கதை திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்து ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கியுள்ளார் புளூ சட்டை மாறன். இதில் பல யுடியூப் பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆனால் இந்த படத்தை அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து எடுத்திருப்பதாக சொல்லி சென்சார் போர்ட்டில் தணிக்கை செய்வதற்கு மறுத்து விட்டனர்.
இப்படியான நிலையில் தற்போது ஆன்டி இண்டியன் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் புளூ சட்டை மாறனுக்கு கண்ணீர் அஞ்சலி ஒட்டப்பட்டிருப்பதும் வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பார்த்து, படமே இன்னும் வெளியே வரல, அதற்குள்ளேயே கண்ணீர் அஞ்சலி போஸ்டரா? என்று அந்த போஸ்டருக்கு பலரும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.




